Search This Blog

Tuesday, June 18, 2013


நீயா நானா? (இந்திய - சீன வல்லரசுப் போட்டி)

ஆசிரியர் : ராகவ் பஹல்மொழிபெயர்ப்பு : சரவணன், மகாதேவன்


பக் : 384; விலை: 200/-


21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்கு இந்தியாவும் சீனாவும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த இரண்டு தேசங்களின் வரலாறை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிக விரிவாக, துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் ராகவ் பஹல்.சீனாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? இந்தியாவின் பலங்கள் என்னென்ன... பலங்கள் என்னென்ன? கல்வி, மருத்துவம், அரசியல், மின்சாரம், ரயில்வே, சமூகக் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையாக அக்குவேறு ஆணி வேறாக அலசியிருக்கிறார். 
புத்தகத்திலிருந்து...
 நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஜிம் ஓ நீல் 2001-ல் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் பிரிக் நாடுகள் (BRIC countries) என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார். அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இந்த நான்கு நாடுகளை ஓர் அணியாக அவர் குறிப்பிட்டிருந்தார். ...


·          இந்த நான்கு நாடுகளின் கூட்டணி 2025 வாக்கில் ஜி-6 நாடுகளின் பொருளாதாரத்தில் பாதியை எட்டிவிடும்.

·          இன்னும் 40 வருடங்களில் ஜி-6 நாடுகளை மிஞ்சிவிடும்...

·          வெறும் சாதாரண கொள்கைகள் மூலமே இதைச் சாதித்துவிடும். அதிரடியாக எதுவும் செய்யத் தேவையே இல்லை.

·          அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய கார் சந்தையாக அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்துவிடும்.

·          பிரிக் நாடுகளில் இந்தியாவுக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. 2025 வாக்கில் இந்தியாவின் தற்போதைய ஜி.டி.பி. 50 மடங்கு அதிகரித்து 25 டிரில்லியன் டாலர் அளவைத் தொட்டுவிடும்.

 பிரிக் நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி சுவாரசியமாக இருப்பதற்கு காரணங்கள் உண்டு. 17,18ம் நூற்றாண்டுகளில் சீனாவும் இந்தியாவும் வல்லரசுகளாக இருந்தன. பொருளாதார வரலாற்று நிபுணர் ஆங்கஸ் மேடிசனின் ஆய்வின்படி, 1600-ல் சீனா, இந்தியாவின் ஜி.டி.பி. உலக ஜி.டி.பி.யில் பாதி அளவுக்கு இருந்தது. (சீனா 28%, இந்தியா23%). ஆனால், அடுத்த 200 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளின் குடியேற்ற ஆட்சியால் இரு நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளாக இரு நாடுகளும் திமிறி எழ ஆரம்பித்துள்ளன. 1770-ல் பள்ளத்தில் இறங்கிய அந்த அலை மேல் நோக்கி உயர ஆரம்பித்துள்ளது.


 இந்தப் புத்தகத்தைவாங்க

No comments:

Post a Comment