Search This Blog

Showing posts with label ஆதி தமிழன். Show all posts
Showing posts with label ஆதி தமிழன். Show all posts

Thursday, July 18, 2013

குமரிக் கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்

குமரிக் கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்
பி.பிரபாகரன்
விலை : 125/- ; பக் : 176

2010 செம்மொழி மாநாட்டில், Traces of Mediterranean Origin of Tamils என்ற தலைப்பில் பிரபாகரன் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் தமிழ் விரிவாக்கமே இந்நூல்.






புத்தகத்திலிருந்து...

திராவிடர்கள் என்ற மக்கள் தென் இந்தியாவில் பல அரசுகளை நிறுவியவர்கள். அப்படியானால் திராவிடர்கள் என்பவர் யார்இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்இவர்கள் எப்போது தமிழர்-களாக மாறினார்கள்இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததுஏன் நிகழ்ந்தது?
வட இந்தியாவில் பஞ்சாபிகுஜராத்திபோஜ்புரிபிகாரிவங்காளம் என்று பல கிளை மொழிகள் இருக்கின்றன . இவை அனைத்துக்கும் சமஸ்கிருதம் என்ற மொழி தாய் மொழியாகப் போற்றப்படுகிறது.
இதே உதாரணத்தை தென் இந்தியாவுக்குக் கொண்டுவந்தால் திராவிடம் என்ற தாய் மொழியிலிருந்து தமிழ்தெலுங்குகன்னடம்மலையாளம் ஆகிய கிளை மொழிகள் தோன்றியதாக எடுத்துக்கொள்ளலாமாஅப்படி எடுத்துக்கொண்டால் திராவிடம் என்ற மொழி எங்கே போயிற்றுகல்தோன்றி மண்-தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி என்பது வெறும் கவிதை வரிகள்தானாஇல்லை,  தமிழ்தான் ஆதி மொழிஅதிலிருந்து பிரிந்தவைதான் மலையாளம்கன்னடம்தெலுங்கு என்று எடுத்துக்கொண்டால் திராவிடம் என்பது ஒரு மொழியைக் குறிக்கும் சொல்லாஅல்லது ஒரு பண்பாட்டைக் குறிக்கும் சொல்லாஅல்லது ஓர் இனத்தைக் குறிக்கக்கூடிய சொல்லா?


***

சாந்தி பாப்பு அத்திரம்பாக்கத்தில் நடத்திய அகழ்வில் தமிழ்நாட்டில் 15 லட்சம் வருடங்களுக்கு முன் கற்கருவிகளைப் பயன்படுத்திய மனிதன் வாழ்ந்தான் என்பது மட்டும்தான் உறுதியாகிறது. எப்போது இந்த மனிதன் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் பெறத் தொடங்குகிறானோ, அப்போதுதானே அவனைத் தமிழன் என்று கருத முடியும்? 
இந்தக் கற்கால மனிதன் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தமிழனாக நாகரிகம் பெற்றிருக்கக் கூடாதா? 
இதற்கும் வாய்ப்பில்லை.
கொற்கையும், பொருந்தலும், பூம்புகாரும் தமிழர்கள் நகர்ப்புற நாகரிகம் பெற்றிருந்ததைத்தான் ஆதாரமாகக் காட்டுகின்றன. தமிழர்கள் மகோன்னதமான பண்பாட்டின் சிகரத்தைத் தொட்டு வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமான மாமல்லபுரம் சிற்பங்களும் சோழர்காலக் கோவில்களும் செப்பேடுகளும் பொ.யு. ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் காணப்படுகின்றன. பல்லவர் காலத்தை சிம்மவிஷ்ணுவில் தொடங்கி பொ.யு. 555 முதல் என்று எடுத்துக்கொள்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். 
அதாவது இந்தக் கற்கால மனிதன் 14,98,600 வருடங்களாக எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு திடீரென்று பல்லவர் காலத்தில் அதாவது பொ.யு. 600 முதல் (இன்றைக்கு 1400 ஆண்டு-களுக்கு முன்பாக) மகோன்னதமான வரலாற்றுச் சின்னங்களைக் கட்ட ஆரம்பித்தான் என்பது நெருடலாக இருக்கிறது. வேறு விதமாகப் பார்த்தால், 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் எந்த வரலாற்றுச் சின்னமும் ஏன் கிடைக்கவில்லை? தஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியில் 80 டன் கல்லை நிறுத்தும் அளவுக்குத் திறமை வாய்ந்த தமிழன், அதற்கு 1,000 அல்லது 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரன வரலாற்றுச் சின்னத்தைக் கூடக் கட்டவில்லை என்பது ஒரு முரண்பாடாகவே தெரிகிறது.
உலக வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் பொ.யு.மு. 3000 முதல் 5000 வரை அநேக நாகரிகங்களில் மாபெரும் வரலாற்றுச் சின்னங்கள் உருவாகியிருப்பதைக் காணலாம். 
உதாரணமாக பொ.யு.மு. 5400-ல் சுமேரியர்கள், எரிது (Eridu)என்ற நகரை உருவாக்கி அதனைச் சுற்றி சுற்றுச் சுவரையும் கட்டினர். சிகுராத்  (Ziggurat)  என்ற கூம்பு வடிவடு கோவில்-களையும் கட்டினர். அவற்றை இன்றும் காணலாம். பொ.யு.மு. 2000-ல் எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டினார்கள். தென் அமெரிக்காவில் இன்கா (Inca) பழங்குடி மக்கள் பொ.யு.மு. 1500-ல் பிரமிடுகளைக் கட்டினார்கள். பொ.யு.மு. 2500-ல் சிந்து சமவெளி மக்கள் கட்டடக் கலையில் மிகச் சிறந்து விளங்கினர். சீனர்கள் பொ.யு.மு. 1000-ல் சீனப் பெருஞ்சுவரைக் கட்டினார்கள். குறைந்தபட்சம் பொ.யு.மு. 500-ல் கட்டப்பட்டது என்றுகூட தமிழகத்தில்  ஒன்றும் இல்லை.
படிப்படியாக வளர்ச்சி அடையும் ஒரு சமுதாயம், ஒவ்வொரு காலகட்டத்துக்கும் உரிய வரலாற்றுச் சின்னங்களை விட்டுச் சென்றிருக்கவேண்டாமா? கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் தமிழன் மாபெரும் கட்டடங்களைக் கட்டத் தவறிவிட்டானா? அல்லது கட்டியவற்றை விட்டுவிட்டு எங்கிருந்தோ கிளம்பி இங்கே வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதா?