Search This Blog

Monday, April 4, 2011

ஜப்பான் அணு உலைகளில் என்னதான் நடக்கிறது? - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் தாக்கப்பட்டு தள்ளாடிக்கொண்டிருக்கும் ஜப்பானின் தற்போதைய கவலை, புகைந்துகொண்டிருக்கும் அதன் அணு உலைகள்.

தாக்குதலுக்கு உள்ளான Fukushima Daiichi அணு ஆலையின் தற்போதைய நிலை என்ன? வெடித்துவிடாது பயப்படவேண்டாம் என்று ஜப்பான் சமாதானப்படுத்தினாலும், பீதியும் குழப்பமும் குறையவே இல்லை.

என்ன நடந்தது? தாக்குதலுக்கு உள்ளான உலையில் இருந்து கதிர்வீச்சு பரவிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?

ஜப்பானில் நடந்தது போல் இந்தியாவிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதா? இத்தனை பயத்திலும் அணு உலைகளை நாம் வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

நாளை மறுநாள் புதன் கிழமை நடைபெற இருக்கும் கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் எல்.வி. கிருஷ்ணன் 'ஜப்பான் அணு உலைகளில் நடந்தது என்ன?' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விடையளிக்கிறார்.எல்.வி. கிருஷ்ணன், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் Safety Research Group பிரிவின் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கலந்துரையாடலும் உண்டு.

தேதி
ஏப்ரல் 6, புதன் கிழமை

நேரம்
மாலை 6.30 மணிக்கு

இடம்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600 018

அனைவரும் வருக.

No comments:

Post a Comment