Search This Blog

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, June 28, 2013

முகலாயர்கள்

‘டெல்லி சென்ற எனது மகன் திரும்பவில்லை அரசரே.  இப்ராஹிம் லோடி அவனைச் சிறைப்படுத்திவிட்டான். அதுபோக லோடி வம்சத்தினருக்கு விசுவாசமாக இருந்த இருபத்து மூன்று முக்கிய மந்திரிகளை இப்ராஹிம் லோடி கொன்றுவிட்டான். ஆகவே தங்களது மேலான உதவியை நாடி வந்துள்ளேன். தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுத்து வந்து, இப்ராஹிம் லோடிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல, அவனால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினரின் விருப்பம்.’

பணிவோடு தௌலத் கான் லோடி சொன்ன வார்த்தைகள், பாபரின் கோபத்தைப் போக்கியிருந்தன. யோசிக்க ஆரம்பித்திருந்தார் அவர்.  அப்போதைக்கு ‘சரி. உதவுகிறேன்’ என்று தௌலத் கானிடம் சொல்லியனுப்பினார் பாபர்.

அடுத்த சில நாள்களிலேயே ரானா சங்காவின் தூதுவர் காபுலுக்கு வந்தார். கொண்டுவந்த செய்தி இதுதான். ‘தாங்கள் இந்துஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். அந்த இப்ராஹிம் லோடியை ஒழிக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ராஜபுத்திரர்களின் சார்பாக நான் உங்களை அழைக்கிறேன்.’

0

‘உன் சகோதரர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதே, அவர்கள் உனக்கு உண்மையாக இருக்கும்வரை.’ பாபர் சொல்லிவிட்டுச் சென்ற இந்தக் கடைசி வார்த்தைகள்தான் ஹுமாயூனுக்கு வினையாக அமைந்தன.

ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நாளில் இருபத்து மூன்று வயது ஹுமாயூன் முகலாயப் பேரரசராக ஆக்ராவில் பதவியில் அமர்ந்தார் (டிசம்பர் 1530). பரந்து விரிந்த பேரரசு. பாபரது மரணம் ஆப்கன்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. டெல்லியைக் கைப்பற்ற காய்கள் நகர்த்த ஆரம்பித்திருந்தார்கள். இன்னொரு புறம் அவ்வளவு பெரிய பேரரசைக் கட்டியாளும் அளவுக்கு நிதி இல்லாத நிலை.

ஹுமாயூனுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்னைகளே விஸ்வரூபமெடுத்து நின்றன. புதிய பகுதிகளைப் பிடித்து பேரரசை விரிவாக்குவதா? நிதி நெருக்கடியைச் சமாளித்து நிர்வாகத்தைச் சீரமைப்பதா? தலைதூக்கும் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வதா?

எல்லாவற்றையும் நானே என் தோளில் சுமப்பதால்தானே மூச்சு திணறுகிறது. எங்கே என் சகோதரர்கள்? வாருங்கள். இளையவன் கம்ரான். இங்கே வா. காபூலையும் காந்தஹாரையும் நீ கவனித்துக் கொள்.  சகோதரன் மிர்ஸா ஹிண்டால், அல்வாரையும் மேவாத்தையும் நீ நிர்வகி. சம்பலை நீ எடுத்துக் கொள் மிர்ஸா அஸ்காரி, யாரது? மிர்ஸா சுலைமானா? உடன்பிறக்காவிட்டாலும் நீயும் என்ற சகோதரன்தானே. பாதக்ஷனின் அரசாங்கத்தை நீ பார்த்துக் கொள். அனைவருக்கும் மகிழ்ச்சிதானே?

0

புத்தகங்களைவிட சிறுவன் அக்பருக்கு புறாக்களையும் பூக்களையும் பார்ப்பது பிடித்திருந்தது. ஹுமாயூன் புத்தகப் பிரியர். ஆனால் காபூலில் வளர்ந்த அக்பருக்குக் கல்வி கசக்கத்தான் செய்தது. கல்வி கற்றுக் கொடுப்பதற்கு என நியமிக்கப்பட்ட தனி ஆசிரியர், அக்பரை எழுத, படிக்க வைப்பதற்குள் திணறிப் போனார்.

குதிரையேறி வேகமாகச் செல்வது, காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்து இயற்கையை ரசிப்பது, விதவிதமாக வேட்டையாடுவது, வாளெடுத்து நண்பர்களுடன் போர் புரிவது - இவை மட்டுமே அக்பருக்குப் பிடித்திருந்தன. எழுத்துகள் அல்ல. தன் பெயரை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக் கொள்வதில்கூட அக்பர் ஆர்வம் காட்டவில்லை.

ஹுமாயூனின் இறப்புக்குப் பிறகு கலகம் எதுவும் ஏற்படாதபடி கவனித்துக் கொண்டார் தளபதி பைரம் கான். அடுத்து அக்பரை அரியணையில் அமர்த்த வேண்டும். சிறுவன்தான். வேறு வழியில்லை. அக்பர் அரியணையில் இருக்கட்டும், ஆட்சிப் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். முடிவெடுத்திருந்தார் பைரம் கான்.

டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தார் அக்பர். பஞ்சாபில் கலானௌர் என்ற இடத்தில் அவரைச் சந்தித்தார் பைரம் கான். தந்தை இறப்புக்கு முறைப்படி துக்கம் அனுஷ்டித்த அக்பர், பின்பு அரியணை ஏறத் தயாரானார்.

0

முகலாயர்கள்
முகில்
கிழக்கு பதிப்பகம்
496 பக்கம், விலை ரூ 325


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Wednesday, June 26, 2013

ஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு

ஒரு  நாடு எப்படி இருக்க வேண்டும்?  நமக்குத் தெரிந்த நாடு இந்தியாதான். எனவே, நம்மைப் பொறுத்தவரை, நாடு என்றால், இந்தியாமாதிரி இருக்க வேண்டும்.

காஷ்மிர் முதல் கன்னியாகுமரிவரை விரிந்த நிலப் பரப்பு. அதில் இமாலயம் முதல் பரங்கி மலை  வரை வகை வகையாய் மலைகள்:  கங்கை, தக்காண சமவெளிகள்; கங்கை, காவேரி, மகாநதி, பி
ரம்மபுத்ரா, கோதாவரி, கிருஷ்ணா, வைகை  நதிகள்: கேரளம், கோவா, பாண்டிச்சேரி போல் கடற்கரைப் பிரதேசங்கள்.

இந்த இலக்கணப்படி பார்த்தால்  ஜப்பான் ஒரு நாடே இல்லை .6852 தீவுகள் சேர்ந்த ஒரு இணைப்பு.

0

ஜப்பான் ஆசியக் கண்டத்தில் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. சீனா, தென் கொரியா, வட கொரியா, ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகள். சீனாவிடமிருந்து சீனக் கடலும், தென் கொரியா, வட கொரியா, ரஷ்ய நாடுகளிடமிருந்து ஜப்பான் கடலும் ஜப்பானைப் பிரிக்கின்றன.

இயற்கை ஜப்பானைப் படைக்கும்போது நெஞ்சில் ஈரமே இல்லாமல் உருவாக்கியிருக்கிறது. உலகின் பத்து சதவிகித எரிமலைகள் ஜப்பானில்தான் இருக்கின்றன - 107 எரிமலைகள்.  அக்னி தன் சக்தியை இப்படிக் காட்டினால், இன்னொரு பஞ்சபூதமான பூமி தரும் பரிசாக ஒவ்வொரு வருடமும்   1500 நில நடுக்கங்கள். உலகத்தின் பூகம்பத் தொழிற்சாலை என்று ஜப்பானைப் பலர் அழைப்பது இதனால்தான். கடல் சும்மா இருக்குமா? தன் பங்குக்குத் தாராளமாகச் சூறாவளிக் காற்று, ராட்சச  அலைகள், பனிப் புயல்கள் ஆகியவற்றை அழையா விருந்தாளிகளாக அனுப்பி வைக்கிறது.

இயற்கையின் ஓர வஞ்சனை இத்தோடு முடியவில்லை. தொழில் உற்பத்திக்குத் தேவையான இயற்கை வளங்கள் ஜப்பானில் கிடையாது.  இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். இறக்குமதிதான் நாட்டின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிர் மூச்சு.

0

இரண்டாம் உலகப் போர். 1939 முதல் 1945 வரை நடந்த  இந்த உலக மகா யுத்தம் பல நாடுகளின் எல்லைக் கோடுகளையும் சில நாடுகளின் தலைவிதியையும் மாற்றி எழுதியது. நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட  பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஓர் அணியில். எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.    

இந்தப் போரை உலக மகா யுத்தமாக மாற்றியதில் ஜப்பானுக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெர்மனியும்  இத்தாலியும் ஃப்ரான்ஸ், பிரிட்டனோடு நடத்திக் கொண்டிருந்த போரை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 1941. ஜப்பான் அமெரிக்காவின் ஹவாயிலிருக்கும் பேர்ள் துறைமுகம், அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிலிப்பைன்ஸ் நாடு ஆகியவைமீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா ஜப்பான்மீது போர் அறிவித்தது. பிற நேச  நாடுகளும் ஜப்பான்மீது போர் அறிவித்தன.

ஆகஸ்ட் 1945. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய  நகரங்கள்மீது  அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியது. 1,11, 000 பேர் பலியானார்கள், ஒரு லட்சம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்.  அமெரிக்காவுக்கு எதிராகப் போர் நடத்துவது முடியாத காரியம் என்று புரிந்துகொண்ட ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

போருக்கு ஜப்பான் கொடுத்த விலை மிக அதிகம். மூன்று கோடிக்கும் அதிகமான மக்களின் மரணம். நாட்டில் இருந்த அத்தனை ராணுவத் தடவாளத் தொழிற்சாலைகளையும் அமெரிக்கா தரை மட்டமாக்கியது. சுமார் 40 சதவிகிதத் தொழிற்சாலைகளும்  முக்கிய நகரங்களும் சிதிலமாயின. ஜப்பான் நாடும் பொருளாதாரமும்  அதல பாதாளத்தில் விழுந்தன. இந்தப் படுகுழியிலிருந்து ஜப்பான் எழுந்து வந்தது. 1960 முதல் 1990 வரை உலகப் பொருளாதார வரிசையில் முன்னணியில் நின்றது. இந்த முப்பது வருட அமோக வளர்ச்சி ஜப்பான் அதிசயம்  (Japan Miracle) என்று அழைக்கப்படுகிறது.  

0

ஜப்பான்
எஸ்.எல்.வி. மூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
196 பக்கம்
விலை ரூ 130


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 094459-01234 / 09445-979797

Monday, June 17, 2013

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)

உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ராமச்சந்திர குஹாவின் India After Gandhi ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு.

இந்திய வரலாறு : காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)





இந்தியா ஒரே அமைப்பாக இருக்க முடியுமா? துண்டாடப்படுமா?
விசாலமான தேசம், 524 மில்லியன் மக்கள், பிரதானமாக வழக்கிலுள்ள பதினைந்து மொழிகள், மாறுபடும் மனங்கள், பல இனங்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு தேசம் உருவாகக் கூட முடியுமா என்ற மலைப்பே ஏற்படும்.
மாபெரும் இமய மலை, வெயிலால் சுட்டெரிக்கப்பட்டு, ஆக்ரோஷமான மழையால் அடித்து நொறுக்கப்பட்ட விரிந்து பரந்த இந்திய – கங்கைச் சமவெளி, வெள்ளம் புரளும் கிழக்கின் பசுமை நிறைந்த டெல்டா, மாபெரும் நகரங்களான கல்கத்தா, பம்மாய், சென்னை போன்றவற்றை உள்ளடக்கிய இந்த நாட்டை நினைத்துப் பார்ப்பதே கடினமாக உள்ளது. இருந்தபோதிலும் இந்த நாட்டில் நிலைக்கக்கூடிய ஏதோ ஒரு கட்டுமானம் காணப்படுகிறது. அதை இந்திய உணர்வு என்று மட்டுமே விளக்கமுடியும்.
ஆசியாவின் தலைவிதியே இதன் வாழ்வில்தான் இருக்கிறது என்று நாம் நம்புவது மிகையல்ல.


- பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டான் டெய்லர் (1969ல்)

நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான, சுவாரஸ்யமான புத்தகம்
- Spectator


புத்தகங்கள், தனிப்பட்ட கடிதங்கள், பத்திரிகைச் செய்திகள், பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் என்று அலபாமா முதல் அலகாபாத் வரை கொல்கத்தா முதல் கலிஃபோர்னியா வரை பரவிப் படர்ந்திருக்கும் தகவல்களைத் தேடித் தேடிச் சேகரித்து இந்த சுவாரஸ்யமான புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் குஹா.
- Daily Telegraph


வரலாற்றுச் செய்திகள் நிறைந்த பெரும் படைப்பு என்றாலும் ஒரு துப்பறியும் நாவலைப் போல் வாசித்துவிட முடியும்.
Time out Mumbai

இந்தியாவைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், இதைவிடச் சிறந்த புத்தகம் இருந்துவிட முடியாது.
- Sunday Telegraph.

இந்தியாவின் ஜனநாயக வெற்றியைக் கொண்டாடும் அதே நேரம் இந்தியாவின் தோல்விகளையும் சறுக்கல்களையும் சுட்டிக்காட்டவும் இந்தப் புத்தகம் தவறவில்லை.
 Sunday Times.

இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு.
ஆசிரியர் : ராமச்சந்திர குஹா
மொழிபெயர்ப்பு : ஆர்.பி. சாரதி.
பாகம் 1 : பக்கங்கள் 640
விலை: 350
பாகம் 2 :
பக்கங்கள் : 640
விலை: 385


ஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234

Monday, April 25, 2011

2011 - சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - தினமலர் - 24 ஏப்ரல் 2011

24 ஏபரல் 2011 தினமலர் நாளிதழில் ‘2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ புத்தக மதிப்புரை வெளிவந்துள்ளது.


புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...

2011-Sarvathikarathilirundhu jananayagaththukku - Tamil

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-644-5.html