Search This Blog

Thursday, July 25, 2013

ரஷ்யப் புரட்சி

ரஷ்யப் புரட்சி எப்படி, யாரால் நடத்தப்பட்டது? சித்தாந்தத்தில் இருந்த கம்யூனிசத் தத்துவத்துக்கு உயிர் கொடுத்தது யார்? எப்படி? உணர்ச்சிபூர்வமான இந்த வரலாற்று நூலில் என். ராமகிருஷ்ணன் ரஷ்யப் புரட்சிக்கு உயிரூட்டி நம் கண்முன் நிறுத்துகிறார்.

0

தொழிலாளர்கள் தினமும் 14 மணி முதல் 15 மணி நேரம் வரை உழைக்க வேண்டியிருந்தது. இந்த நிலை ஆண்கள், பெண்களுக்கு மட்டுமல்ல. சிறுவர்களுக்கும் கூடத்தான். உடல்நலம் சரியில்லை என்று சொல்லி வேலைக்கு போகாமல் இருந்துவிட முடியாது. சரியாக தூங்காமல் ராட்ச இயந்திரங்களில் அகப்பட்டுக்கொண்டு கையையும், காலையும் இழந்தவர்களின் எண்ணிக்கையை இது வரை யாரும் கணக்கிடவில்லை.

உதாரணத்துக்கு இயந்திர பல்சக்கரத்தில் மாட்டிக்கொண்டு ஒரு தொழிலாளி தனது கையை இழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதிகாரிகளும் மேற்பார்வையாளர்கள் என்ன செய்வார்கள்? உடனடியாக ஒரு குழுவை அவசர அவசரமாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைப்பார்கள். எதற்கு? தொழிலாளிக்கு அவசர சிகிச்சை அளிக்கவா? அல்ல. இயந்திரம் கோளாறாகி நின்றுவிட்டால் வேலை கெட்டு விடும். எவ்வளவு வேலை கெடுகிறதோ அந்த அளவுக்கு லாபம் குறைந்துவிடும். எனவே, இயந்திரத்தை பழுது பார்க்க வேண்டியது அவசியம். அப்படியானால் அடிப்பட்ட தொழிலாளியின் கதி? அவனை அகற்றி விட்டு வேறொருவனை நியமித்துவிடுவார்கள். இயந்திரத்துக்குத் தான் பஞ்சம். தொழிலாளர்கள் வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவுக்கு கிடைப்பார்கள்.

பணியகத்தில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கும் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எந்தவிர நிவாரண உதவியும் கிடையாது. மருத்துவ செலவுகளுக்கான பணம் கூட கொடுக்கப்படுவதில்லை. தொழிலாளளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள், நல்வாழ்வுச் சட்டங்கள் என்று எதுவும் கிடையாது. எத்தனை மணிநேரம் உழைத்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் கூலி மிகமிகக் குறைவு. மிஞ்சி மிஞ்சிப் போனால் மாதத்துக்கு 7 அல்லது 8 ரூபிள்கள் மட்டுமே கிடைக்கும். உலோக மற்றும் வார்ப்புத் தொழிற்சாலைகளில் மட்டும் 35 ரூபிள் வரை கொடுக்கப்பட்டது. வேலை உத்தரவாதம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கழட்டிவிடப்படலாம் என்ற நிலை. அவர்களுக்கு
பசியெடுத்தால்கூட அருகிலுள்ள கடைக்குச் சென்று தேவையானதை வாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் வேலை பார்க்கும் ஆலைகளுக்குச் சொந்தமான கடைகளுக்குச் சென்றுதான் வாங்க வேண்டும். ஆனால் அங்கு பொருள்களின் விலை வெளியில் இருப்பதைவிட அதிகமாகவே இருக்கும்.

இது போக தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைவான ஊதியமும் அவர்களுக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. நிர்வாகங்கள் எதற்கெடுத்தாலும் தொழிலாளிகள் மீது அபராதங்கள் விதித்தன. அந்த அபராதத் தொகை அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது. மொத்தத்தில், ஒரு மனிதனை எந்த அளவுக்கு சுரண்டலாமோ அந்த அளவுக்கும் மேலாகவே சுரண்டினார்கள்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாது எனும் கட்டத்தில் தொழிலாளர்கள் திமிறி எழுந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் துணிந்தனர். எதிர்ப்பு வன்முறையாகவும் வெடித்தது.  இயந்திரங்களை உடைத்துத் தூள் தூளாக்கினர். ஆலை நிர்வாகத்தின் அலுவலகங்களையும், அது நடத்தி வந்த கடைகளையும் நாசம் செய்தனர்.

(புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி)

0


ரஷ்யப் புரட்சி
என். ராமகிருஷ்ணன்
136 பக்கம், ரூ.95

போன் மூலம் வாங்க: Dial For Books - 94459 01234

No comments:

Post a Comment