Search This Blog

Thursday, March 17, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - எழுத்துகளின் கதை - தொடர் கூட்டம்

மொழியும் எழுத்தும் வெவ்வேறானவை. மொழிக்கு எழுத்துகள் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வாய்மொழியாகவே பல மொழிகள் ஜீவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எழுத்துகளுக்கு மொழி அவசியம்.

எழுத்துகள் தோன்றி, படிப்படியாக உருப்பெற்று, நிலைபெற்ற கதை சுவாரஸ்யமானது. மனித குலத்தின் கதையும் நாகரீக வளர்ச்யின் கதையும்கூட இதில் இணைந்தே இருக்கிறது.

எழுத்துகளின் கதை என்னும் வரிசையில் பேரா. சுவாமிநாதன் ஒவ்வொரு மாதமும் எழுத்துகள் குறித்து கிழக்கு மொட்டைமாடியில் உரையாடிக்கொண்டிருக்கிறார். உலக எழுத்துகள் வரிசையில் சீன, எகிப்திய, மிசோ அமெரிக்க எழுத்துகள் குறித்து உரையாடினார்.

இந்திய எழுத்துகள் வரிசையில் பிராமிய, கரோஷ்டி எழுத்துகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டு எழுத்துகள் குறித்தும் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இன்று மாலை 6.30 மணிக்கு வட்டெழுத்து, தமிழ், கிரந்த எழுத்துகளின் வளர்ச்சி குறித்து பேரா. சுவாமிநாதன் பேசவிருக்கிறார்.

அனைவரும் வருக!

இடம்:
கிழக்கு மொட்டைமாடி
33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை 18

நாள்:
17-மார்ச்-2011, வியாழக் கிழமை

நேரம்:
மாலை 6.30 மணி

No comments:

Post a Comment