Search This Blog

Friday, March 4, 2011

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் - 3 மார்ச் 2011 - வானவியல் பற்றி த.வி. வெங்கடேஸ்வரன்

4-மார்ச் 2011

நேற்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

த.வி. வெங்கடேஸ்வரன், இந்திய பண்டைய வானிவியல் ஆய்வுகளைப் பற்றியும், இந்திய வானிவியல் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் பற்றியும் மிகவும் சிறப்பாகப் பேசினார். கூடவே அதே காலகட்டத்தில் உலகில் நடந்த வானவியல் முன்னேற்றங்களைப் பற்றியும் பேசினார்.

கடிகாரம், தொலைபேசி போன்ற கண்டுபிடிப்புகள் இல்லாத நாள்களில், நம் முன்னோர்கள் பெற்றிருந்த வானவியல் அறிவு உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. நாள், வாரம், மாதம், வருடம் என ஒவ்வொரு கணக்குக்குப் பின்னும் உள்ள அறிவியல் பூர்வமான சிந்தனைகள் குறித்து அவர் விளக்கியது அருமையாக இருந்தது.

6.30க்குத் தொடங்கிய அவர் பேச்சு சுமார் 8 மணி வரை நீடித்தது. அதற்குப் பின்னர் 9 மணி வரை பார்வையாளர்கள் சுவாரஸ்யம் குறையாமல் அவருடன் உரையாடியது ஆச்சரியம்.

இனி இதேபோல் தொடர்ந்து கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம்.

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

பத்ரியின் பதிவில் காணொளி (வீடியோ) வலையேற்றப்பட்ட பின்பு, இங்கேயும் அதனைப் பகிர்ந்துகொள்வோம்.

No comments:

Post a Comment