Search This Blog

Tuesday, January 10, 2012

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?


பள்ளி ஆண்டிறுதிப் பரீட்சைகள் நெருங்கிவிட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எப்போது என்று அறிவித்துவிட்டார்கள். +2 தேர்வுகள் பற்றி விரைவில் அறிவித்துவிடுவார்கள்.

+2 படிக்கும்போது முதல் நோக்கம் நல்ல மதிப்பெண் பெறுவது. அடுத்து, பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு என்ன செய்யலாம் என்பது பெரும் கேள்வி ஆகிவிடுகிறது. பெரும்பாலானோர் பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். மருத்துவ இடங்கள் குறைவாக இருப்பதால், மிக அதிகமானோர் செல்வது பொறியியல் படிப்புக்குத்தான்.

முன்புபோல் இல்லாது இப்போது மிகச் சிலரே அறிவியலை ஆர்வத்துடன் படிக்கிறார்கள்.

மேற்படிப்பில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதே பலருக்கத் தெரிவதில்லை. என்னென்ன படிப்புகள், எங்கெல்லாம் அவற்றைப் படிக்கலாம் என்று பெற்றோர்களும் மாணவர்களும் குழம்பாமல் இருக்க, இந்தப் புத்தகம் உதவும்.

கே.சத்யநாராயண், என்னைப் போன்றே ஐஐடி சென்னை, கார்னல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். கிரிக்கின்ஃபோவில் என்னுடன் இருந்தார். நாங்கள் சேர்ந்துதான் கிழக்கு பதிப்பகத்தை ஆரம்பித்தோம்.

கல்வித்துறைமீது மிகுந்த நாட்டம் கொண்டவர். அவருடைய வலைப்பதிவில் கல்வி பற்றிய பல கட்டுரைகளை நீங்கள் காணமுடியும்.

அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் முதல் பாகம்தான். இதில் பொறியியல், மருத்துவம், அறிவியல்/கணிதம், சட்டம் ஆகிய துறைகளில் மேல்படிப்புக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி உள்ளது. இரண்டாவது பாகத்தில் காமர்ஸ், கலை, மொழி, பொருளாதாரம், மற்றும் பிற துறைகள் பற்றி வரும். விரைவில் அந்தப் புத்தகமும் வெளியாகும்.

No comments:

Post a Comment